இலக்கணம்



புணர்ச்சி 

பின்வரும் புணர்ச்சிகளைச் செய்து ஒப்படைக்கவும். 


1.  உடல்வலிமை  ______________________________________
2.  பாடலாசிரியர்________________________________________
3.  அவருடைய
4.  அப்பசு
5.  கண்ணெரிச்சல்
6.  மண்ணாசை
7.  படையெடுப்பு
8.  அறஞ்செயல்
9.  வரந்தந்தார்
10.          மரவேர்
11.          பற்பொடி
12.          சொற்புணர்ச்சி
13.          முட்செடி
14.          மட்சட்டி
15.          பொற்சங்கிலி
16.          உடலோம்பல்
17.          மலையுச்சி
18.          கல்லுடைத்தான்
19.          மக்கட்பெருக்கம்
20.          இவ்வாண்டு
21.          பழத்தோட்டம்
22.          பூமாலை
23.          அவ்வோசை
24.          பணியிடையே
25.          திருவடி
26.          நெற்பயிர்
27.          சொற்றொடர்
28.          வாட்போர்
29.          மட்சட்டி
30.          பொற்குவளை
31.          தீயெரிந்தது
32.          மாவிலை
33.          பூவிதழ்
34.          இலையுதிர்
35.          வரவிருந்தான்
36.          பகையுணர்ச்சி
37.          இவ்வணி
38.          இம்முறை
39.          மும்முறை
40.          மனமிரங்கு
41.          கடலலைகள்
42.          மலைமுகடு
43.          தேனாடை
44.          பல்லாண்டு
45.          மலையோரம்
46.          பணந்தந்தார்
47.          குடற்புண்
48.          உட்புறம்
49.          பெண்ணரசி
50.          படுத்துறங்கு

25.9.15 
தேர்வுப் பயிற்சிகள் 
இங்குள்ள பயிற்சிகளைச்  செய்யவும். அவற்றை தாளில் அச்சடித்துக் கொண்ட செய்து வரவும். 

உயர்தமிழ்

தாள் 2 (80 Marks)

உயர்நிலை 2 (New Model P9)                                            
அ பிரிவு

1. முன்னுணர்வு கருத்தறிதல்                               (10 மதிப்பெண்கள்)
பின்வரும் பத்தியில் கோடிட்ட இடத்தைத் தக்க உதவிச் சொல்லைக் கொண்டு நிரப்பவும்.

தன்னுடைய செருப்பு தொழிற்சாலைக்கு அந்த முதலாளி வந்திருந்தார். அங்கே ஒரு பகுதியில் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த முதலாளியிடம், இங்கே அடுத்தவர் என்ன செய்கிறார் என்று கவலைப்படாமல் தங்கள் கடமையை 1.__________________________ ஒவ்வொரு தொழிலாளிக்கும் சொல்லித்தரப்பட்டிருக்கிறது என்றார் மேலாளர் பெருமையாக.
ஒரு தொழிலாளி ஒரு அட்டைப்பெட்டியை எடுத்து, அதன் மீது லேபிலை   ஒட்டி, அடுத்தவரிடம் தள்ளினார். அவர் அந்தப் பெட்டியில் ஒற்றைச் செருப்பை                2. __________________________ அடுத்தவரிடம் தள்ளிவிட்டார். அடுத்தவர் அந்தப் பெட்டியை மூடி ஒட்டியதும் அந்தப் பெட்டி பேக்கிங் பகுதிக்குச் சென்றது. விற்பனை வண்டியில் ஏற்றி கடைக்கு 3. __________________________ சமயத்தில் முதலாளி அதை நிறுத்தினார். என்ன இது, செருப்புகளை ஜோடியாகத்தானே விற்பனைக்கு அனுப்ப வேண்டும்? ஏன் 4. __________________________ செய்தீர்கள் என்றார் முதலாளி. அதற்கு அந்த மேலாளர், ஐயா, வலது கால் செருப்பைப் பெட்டியில் வைக்க வேண்டியவர் இன்று லீவு அதனால்தான் இப்படி, மற்றபடி இவர்கள் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாகவே செய்கிறார்கள் என்றார்.
எந்த ஒரு வேலையையும் ரசித்து அனுபவித்து 5. __________________________ கடமைக்காகச் செய்தால் இதுதான் நடக்கும். நாளைக்கு அந்தப் பெட்டியைப் பிரித்துப் பார்க்கும் கடைக்காரர் வாடிக்கையாளரிடம் என்ன சொல்வார்? அந்த வாடிக்கையாளர் மீண்டும் நம்முடைய செருப்பை வாங்க துணிவரா என்று கேட்டா? இதைக் கேட்ட மேளாலர் இப்படி ஒரு விசயம் இருக்கிறதா என்று அப்போதுதான் சிந்தித்தார்.     




2. பிழை திருத்தம்                                (10மதிப்பெண்கள்)

கீழ்க்காணும் பகுதியில் இடப்பக்கத்தில் ஐந்து வினாக்களின் எண்கள் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு வினாவிற்கும் எதிரில் உள்ள வரியில் ஒரு பிழையான சொல் உள்ளது. அந்த ஐந்து வரிகளிலும் உள்ள பிழையான சொல்லைத் திருத்தி அச்சொற்களின் சரியான வடிவத்தை எழுதவும்.






6



7





8



9



10









இப்போது உலகில் அதிகமாக பேசப்படும் ஒரு சொல் மனஅழுத்தம் என்பது ஆகும். நிர்வாகம் பற்றி பேசும் எல்லா இடங்களையும் இந்த மனவழுத்தம் என்ற சொல்லும் சர்வசாதாரணமாக காணப்படும். இந்த மனவழுத்தத்தை எப்படி கையாள்வது என்று சொல்லித்தர மனஇயல் படித்த நிபுனர்கள் பல இடங்களிலும் இருக்கிறார்கள். வேலை செய்யும் இடம், குடும்பம் மற்றும் நாடு ஆகிய இடங்களில் எல்லாம் நிர்வாகம் மிகவும் அவசியமாகிறது. மன அழுத்தம் என்பது விட்டுவிட வேண்டிய விசயம். அது நம்முடனேயே வைத்துக்கொண்டு அதை நிர்வகிப்பது எதற்காக என்றுதான் புரியவில்லை. காரணம், வளர்ச்சி என்றாலே அதிகமாக பணம் சேர்ப்பது என்ற நிலைதான் இன்று காணப்பட்டது. வாழ்வில் மற்ற எல்லா அம்சங்களையும் துரத்தி தள்ளிவிட்டு பணமே மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆபத்து இது. இதிலிருன்து மீள ஒரே வழி வாழ்வில் பணத்தைத் தவிர மற்ற விசயங்களுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும்.



ஆ பிரிவு


3.   புணர்ச்சி                                  ( 10 மதிப்பெண்கள்)
பின்வரும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

11. முள்   +   மலை     =______________________________
12. கண்  +     ஆடி   =    ______________________________
13. குறில்  + வடிவம்   =     ______________________________
14. தீ   +  காடு      =    ______________________________
15. வடக்கு   + பக்கம்   =  ______________________________



No comments:

Post a Comment